Thursday, May 20, 2021

ஆகஸ்ட் இரண்டாம் தேதி பதினெட்டாம் பெருக்கு அதற்கு நாம் பலவித சித்ரான்னங்கள் செய்வது வழக்கம் அதில் முதலிடம் பெறுவது புளி சாதம என்னும் புளியோதரை இப்பொழுது ஊரடங்கு உத்தரவில் இன்ஸ்டன்ட் புளியோதரை பொடிகடையில் கிடைத்தது கஷ்டம் எனவே அதை வீட்டில் தயாரிக்கும் முறை கூறியுள்ளேன் மிகவும் நன்றாக இருக்கும்திடீர் புளியோதரைப்பொடி 

புளி சாதம் என்னும் புளியோதரை யை  விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது 
கஷ்டம் .ஆனால் இப்பொழுது இன்ஸ்டன்ட் பொடிகள் வந்து விட்டது .
கடையில் வாங்கும் பொடி வீணாகாமல் இருக்க சில ரசாயன பொருட்களை 
சேர்க்கிறார்கள் .இது உடலுக்கு கெடுதியை விளைவிக்கும் .நாம் வீட்டிலேயே 
அதை செய்யும் முறையை நான் இங்கு கூறுகிறேன் .இதை நீங்களும் செய்து 
நல்ல புளியோதரையை செய்து அனைவரையும்மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள் 
தேவையான பொருட்கள் 

புளி  ---------------------------------------------------------------------நூறு கிராம் அதாவது ஒரு சாத்துக்குடி அளவு 

கடலைப்பருப்பு -----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு ----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
மிளகு ----------------------------------------------------------------------ஒரு டீஸ்  ஸ்பூன் 
தனியா --------------------------------------------------------------------மூன்று டேபிள் ஸ்பூன் 
மிளகாய் -------------------------------------------------------------------இருபது 
பெருங்காயம் ------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
வெந்தயம் ------------------------------------------------------------------ஒருஸ்பூன் 
வெல்லம் ---------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு பிடி 
வேர்க்கடலை தோல் நீக்கியது --------------------------------------ஒரு கப் 
நல்ல எண்ணெய் ------------------------------------------------------------அரைசுப்( அல்லது)தேவையான அளவு 
 கடுகு ---------------------------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 

செய்முறை 

கடுகு ,வெல்லம் ,கறிவேப்பிலை ,வேர்க்கடலை  எண்ணெய் தவிர மற்ற 
பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில்நன்றாக 
பொடியாக அரைத்து எடுக்கவும்  கறிவேப்பிலையை தேவையான உப்புடன் 
சேர்த்து வறுத்து எடுக்கவும் .உப்பில் நீர் இருக்கும் என்பதால் வறுக்க    வேண்டும்  .பின்பு  வேர்க்கடலை வெல்லம் கறிவேப்பிலை உப்பு  அத்துடன் கலந்து ஆறியதும்பாட்டலில்போட்டு வைக்கவும் ..இதுவே இன்ஸ்டன்ட் 
புளியோதரை பொடி இது மாதக்கணக்கில் வீணாகாது 

புளியம் சாதம் செய்யும் முறை 

சாதம் செய்து ஒரு அகலமான தட்டில் ஆறவைத்து நல்ல எண்ணெய் ஊற்றி 
அதில் தேவையான அளவு பொடி போட்டு கலக்க வேண்டும்   
ஹையா 

ரம்மியமான புளியோதரை ரெடி .

Thursday, March 4, 2021


மசால் தோசை

மசால் தோசை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் அதுவும் ஹோட்டல் மசால் தோசை போல செய்தால் ஒரு கை பார்ப்பார்கள் அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி.,..,,,3 கப்
உளுத்தம் பருப்பு.,,.,.1கப்
பயத்தம் பருப்பு....,,,,1 பிடி
கடலைப்பருப்பு.,.....,..1 பிடி
வெந்தயம்........,..,..,......1 ஸ்பூன்
அவல்........,,.,...,.........,,...,.1 பிடி

செய்முறை
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து உப்பு போட்டு வைக்கவும் மறுநாள் தோசை வார்க்கலாம், அதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி உருளைக்கிழங்கு மசாலா ஏற்றது

உருளைக்கிழங்கு மசாலா செய்யும் முறை

நான்கு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும் 2 வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்
செய்யும் முறை
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்விட்டு
 அதில் அரை ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொன்னிறமாக வதக்கவும் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதில் போட்டு ஒரு டம்பளர் தண்ணீர் விடவும் தேவையான உப்பு போடவும் நன்றாக கொதிக்கவிட்டு அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கடலை மாவு கரைத்து விட வேண்டும் நன்றாக கொதித்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது போட்டு இறக்கவும்,

தோசையை வார்த்து அதனுள் கிழங்கை வைத்து மடித்து
கொடுக்க வேண்டும்

இதுவே மசால் தோசை ஆகும்






 

On Thu, 4 Mar 2021, 11:08 am syamala venkataraman, <tvrvvssy@gmail.com> wrote:
Show quoted text