Saturday, November 16, 2019

puli inchi

புளி இஞ்சி 


பெரிய கல்யாணங்களில் மோர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு  பதிலாக 
புளி இஞ்சி என்றitem போடுவார்கள் .அது மிகவும் ருசியாக இருக்கும் .அது
செய்யும் முறையை பார்ப்போம் .
செய்முறை 
தேவையான   பொருட்கள் 
இஞ்சி துருவியது -----------------------------------ஒரு கப் 
பச்சை மிளகாய் -------------------------------------மூன்று 
புளி ----------------------------------------------------------ஒரு   எலுமிச்சை  அளவு  
மிளகாய்பொடி ------------------------------------- அரை  டேபிள் ஸ்பூன் 
 மஞ்சள் தூள் -------------------------------------------ஒரு சிட்டிகை 
பெருங்காயம் --------------------------------------------ஒரு சிட்டிக
வெல்லம் --------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் -------------------------------------------------மூன்று டேபிள் ஸ்பூன் 
கடுகு -------------------------------------------------------------அரை டீஸ்பூன் 
உப்பு -------------------------------------------------------------தேவையான அளவு 


செய்முறை :

1இஞ்சியை துருவி  வைத்து கொள்ளவேண்டும் 
2புளியை அரைகப்  தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவேண்டும் 
3அடுப்பில் வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகை தாளி  க்கவேண்டும் 
4அதில் மிளகாய் சிறியதாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும் 
5இஞ்சி துருவலை சேர்க்க வேண்டும் .அடுப்பு மெதுவாக எரிய விட வேண்டும்புளி தண்ணீரை சேர்க்க வேண்டும்  
6மஞ்சள் தூள் ,பெருங்காயம் சேர்க்கவேண்டும் 
7வெல்லம் சேர்க்க வேண்டும் 
8அடிபிடிக்காமல் கிளறவேண்டும் 9எண்ணெய் பிரிந்து வரும்  சமயம் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் 
9ஈரமில்லாத பாத்திரத்தில் அல்லது பாட்டலில் போட்டு வைக்க வேண்டும் 

இது மிக ருசியாக இருக்கும் .தயிர் சாதத்திற்கு சரியான காம்பினேஷன்  

  

No comments:

Post a Comment