கருவேப்பிலை பொடி
தேவையான பொருட்கள்
பச்சைக் கருவேப்பிலை ஐந்து கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு நாலு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை இரண்டு கைப்பிடி
சீரகம் ரெண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல் 20
பெருங்காயம் ஒரு டேபிள் ஸ்பூன்
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் கருவேப்பிலையை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்க வேண்டும் அதன்பின் பருப்புகளை தனித்தனியாக கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதன்பின் சீரகத்தை சிவக்க வறுக்க வேண்டும் அத்துடன் பெருங்காயத்தூளும் சேர்க்க வேண்டும் கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு சூடான வாணலியில் புளியை புரட்டி எடுக்க வேண்டும். அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும் கடைசியாக தேவையான உப்பை போட்டு ஒரு சுத்து சுற்றி அரைத்து அதை ஆறவிட வேண்டும். பொடி நன்றாக ஆறிய உடன் ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இதைஉபயோகிக்கலாம். இதை சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் சிறந்தது.
No comments:
Post a Comment