Saturday, August 22, 2020

தட்டை

தேவையான பொருள்
பச்சரிசி மாவு............2 கப்
உளுத்தம் மாவு வறுத்து பொடி செய்தது.,.............1/4 கப்
பொட்டுக்கடலைமாவு 1/4 கப்
காஷ்மீரி சில்லி பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 கைப்பிடி எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
செய்முறை
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணையை காய்ச்சி அதில் ஊற்றி தேவையான உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தால் போதும்
இரண்டு அலுமினியம் ஃபாயில் களை எடுத்துக்கொண்டு கோலி குண்டு அளவு உருட்டி ஒரு foil மேல் வைத்து மற்றொரு. Foil மேலே வைத்துஅதை டபராவால் அழுத்தவேண்டும் அப்போது வட்டமாக வரும் அதை எண்ணெய் காய்ந்ததும் போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும் இதுதான் தட்டை செய்யும் முறை



மடம்

Monday, August 17, 2020

கடுபு(Karnataka special)

கடுபு என்பது கர்நாடகாவில் செய்யும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு மாலையாக போடுவார்கள் அதை செய்யும் முறையை கீழே காண்போம்

தேவையான மட்ட
கடலைப்பருப்பு................. ஒரு கப் (டம்ளர்)
வெல்லம்.............................. ஒரு கப்
தேங்காய்.............................. ஒரு மூடி
கோதுமை மாவு................... 200 கிராம்
அரிசி மாவு.............................. ஒரு ஸ்பூன்
கிராம்பு....................................... 4
திராட்சை.................................... 25 கிராம்

செய்முறை
கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுக்கவேண்டும் அதை மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு கரகரப்பாக அரைக்கவும் அதை வெல்லத்தில் பாகு வைத்து அதில் போட்டு கிளற வேண்டும் அத்துடன் திராட்சை கிராம்பு அரிசி மாவை போட்டு நன்றாக கிளறி எடுத்து ஆற வைக்க வேண்டும். கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்து சிறிய வட்டமாக இட்டு அதில் பூரணத்தை வைத்து boat வடிவத்தில் மூட வேண்டும் அதை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இதுதான் கடுபு



...
.....
.
.. 





......

Tuesday, July 28, 2020

பொருள் விளங்கா உருண்டை

பொரிவிளங்காய் உருண்டை
தேவையான பொருட்கள்

அரிசி 200….. கிராம்
கடலைப்பருப்பு 100கி
பயித்தம் பருப்பு 100கி
வெல்லம் 500கி
ஏலம் 5கி
சுக்கு 5கி
செய்முறை….., அனைத்து பொருட்களையும் வெல்லம் தவிர சிவக்க வறுத்து நன்றாக அரைக்க வேண்டும் வெல்லத்தை கெட்டி பாகு காய்ச்சி மாவில் ஊற்றி கிலரி அதில் வேர்க்கடலை கொஞ்சம் போட்டு கெட்டியாக உருண்டை பிடிக்க வேண்டும் இதற்குப் பெயர் பொருள் விளங்கா உருண்டை இது குழந்தைகளுக்கு மிக சத்து உள்ள தின்பண்டம்







Saturday, May 16, 2020

வெங்காய தொக்கு

இப்பொழுது வெங்காயம் சகாய விலையில் கிடைக்கிறது அதைக்கண்டு தொக்கு எப்படி செய்வதென்று கூறுகிறேன் இது சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் .. இட்லி தோசை போன்றவற்றிற்கு சைடு டிஷ் ஆக உபயோகப்படுத்தலாம் இதை மாதக்கணக்கில் உபயோகப்படுத்தலாம தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சூப்பராக இருக்கும் இது செய்முறை தேவையான பொருள்கள் கீழே பார்க்கலாம்
தேவையான பொருட்கள்

பெரிவெங்காயம்----------------------10
சிகப்பு மிளகாய்--------------25
எண்ணெய்-----------------------ஒரு கரண்டி
வெல்லம்-----------------------------1 நெல்லிக்காய் அளவு
கடுகு-----------------------1ஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை பெரிதாநறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் மிளகாய் தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் மைய அரைக்க வேண்டும். வாண


லி அல்லது ரைஸ் குக்கர் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் கடுகு தாளிக்க வேண்டும் அதில் அரைத்து வைத்த விழுதை கொட்டி கிளறவண்டும். சுருண்டு வரும் சமயத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கி வைக்க வேண்டும் இது மிகவும் சுலபமான தொக்கு.

பின்குறிப்பு---------ரைஸ் குக்கரில் செய்தாள் அடிக்கடி கிளற வேண்டிய அவசியம் இருக்காது.

Friday, April 17, 2020

கைமா இட்லி

கைமா இட்லி என்பது ஹோட்டல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது .அதில் சரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி மிகவும் பெயர் பெற்றது அதை வீட்டிலேயே செய்யலாம்..

அதற்கு தேவையான பொருட்கள்

ஆறிய இட்லி--------------------------5
பெரிய வெங்காயம்--------------ஒன்று
தக்காளி----------------------------------இரண்டு
குடைமிளகாய்------------------------1
பச்சை பட்டாணி-----------------------ஒரு பிடி
இஞ்சி பூண்டு விழுது----------------1டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா பவுடர்--+------------1ஸ்பூன்
மிளகாய்த்தூள்---------------------------1ஸ்பூன்
எண்ணெய்--------------------------------1டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை&கொத்தமல்லி-கொஞ்சம
செய்முறை
இட்லியை சதுரத் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வை
ஒரு வாணலியிஎண்ணெய்யை விட்டு கடுகு தாளி அத்துடன் கருவேப்பிலை வெங்காயம் போட்டு வ.தக்கு, அத்துடன் பூண்டு இஞ்சி விழுதைப் போட்டு வதக்கு. நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு மசியும்படி வதக்கு. குடைமிளகாய் பட்டாணி போட்டு வதக்கவும்அத்துடன் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடு. தண்ணீர் குறைந்ததும் வறுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு நன்கு கிளறு. அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவுகைமா இட்லி யைகீழே இறக்கி வை. இப்பொழுது கலர்ஃபுல்லான கைமா இட்லி தயார்.

கைமா இட்லி

கைமா இட்லி  ஹோட்டல் களில்     




















Wednesday, February 19, 2020

fried idli

ஃப்ரைட் இட்லி. இட்லி தட்டைஎடுத்து அதுல மாவு விட்டு குட்டி இட்லி பண்ணனும் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவேண்டும் எண்ணெய் காய்ந்ததும் இந்த குட்டி இட்லியை போட்டு நல்ல பொன்னிறமாக வறுத்து எடுக்கணும் உடனே சூடாக இருக்கும்போதே அந்த இட்லியை இட்லி மிளகாய்பொடியில்நன்றாக பிரட்டி எடுத்து வைக்கணும் இந்த இட்லி மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவை இல்லை மிகவும் ருசியுடன் கரகரப்பாக காரமாக இருக்கும் இதை நீங்களும் செய்து பாருங்கள்.

finger idli

ஆறின இட்லிய ஒரு தட்டுல வெச்சி பென்சில் மாதிரியே நீளவாக்கில் கட் பண்ணனும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.
இதுக்கு பிரைட் பி ஃபிங்கர்  இட்லி என்று பெயர்.  
டொமேடோ கெட்சப் இதற்கு சரியான சைட் டிஷ்.
இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்களும் செய்து குழந்தைகளை சந்தோஷப்படுங்கள்.

Sunday, February 16, 2020

syamalas Arusuvai virunthu: orumavu pala tiffin

syamalas Arusuvai virunthu: orumavu pala tiffin: ஒரு மாவு பல டிபன் இட்லி என்பது நம் பாரம்பரிய உணவு .இதைப் ஒரு சத்துணவு என கூறுவார்கள் .எளிதில் ஜீரணமாகக்கூடியது .குழந்தை முதல் வயதானவ்ர்கள...

orumavu pala tiffin

ஒரு மாவு பல டிபன்

இட்லி என்பது நம் பாரம்பரிய உணவு .இதைப் ஒரு சத்துணவு என கூறுவார்கள் .எளிதில் ஜீரணமாகக்கூடியது .குழந்தை முதல் வயதானவ்ர்கள் வரை இது சிறந்த உணவாக கருதப்படுகிறது .இதை செய்யும் முறையும் அதிலிருந்து வெவேறு ருசியுடன் செய்யும் வேறு பல பலகவகைகளையும் இன்று பார்ப்போம்
இட்லி செய்யும் முறை

இட்லி செய்ய புழுங்கல் அரிசி யும் குண்டு உளுத்தம் பருப்பும் தேவை .நான்கு கப் அரிசியும் ஒரு கப் வெள்ளை உளுத்தம் பருப்பும் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தியமும் தேவை .அரிசியநான்கு  மணி நேரம் நன்கு களைந்து ஊற வைக்க வேண்டும் உளுந்தையம் வெந்தியதையும்  இரண்டு  மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் தனித்தனியாக அரைக்கவேண்டும் .வெந்தியதை உளுந்துடன் சேர்த்து அரைக்கவேண்டும் .அரைத்த உளுந்த மாவை ஒரு கரண்டி எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்கவேண்டும் அதுதான் சரியான பதம் பிறகு அரிசிமாவுடன் உளுந்த மாவை சேர்த்து தேவையான உப்பு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும் .இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவைஊற்ற வேண்டும் .மாவு கரண்டியால் எடுத்து ஊற்றும் பதத்தில் இருக்கவேண்டும் அப்பொழுது தான் இட்லீ பூப்போன்று இருக்கும் .நன்றாக வெந்ததும் ஸ்பூனால் ஈடுத்து பறிமாற வேண்டும் ,சட்னி ,சாம்பார் ,மிளகாய்ப்பொடிசரியான காம்பினேஷன்  .
இதே மாவை கொண்டு வேறு பல டடிபன் செய்யும் முறையை இனி 
பார்ப்போம்  

Saturday, February 8, 2020

syamalas Arusuvai virunthu: aviyal

syamalas Arusuvai virunthu: aviyal: அவியல் அதை கல்யாண சாப்பாடு என்றாலே அவியல் தான் முதலிடம் பெரும் .இலையில் அதை பரிமாறினால் தான் சாப்பாடே சிறப்புறும் .அதை செய்ய  தேவையான...

aviyal

அவியல்

அதை கல்யாண சாப்பாடு என்றாலே அவியல் தான் முதலிடம் பெரும் .இலையில் அதை பரிமாறினால் தான் சாப்பாடே சிறப்புறும் .அதை செய்ய 
தேவையான பொருளையும் செய்யும் விதத்தையும் பார்ப்போம் 


தேவையான காய்கள் 
வெள்ளை பூசணிக்காய் --------------------------------------------அரைகிலோ 
சேனைக்கிழங்கு --------------------------------------------------------கால் கிலோ 
புடலங்காய் -----------------------------------------------------------------அரைகிலோ 
உருளை கிழங்கு -----------------------------------------------------------கால் கிலோ 
சௌசௌ -----------------------------------------------------------------------கால் கிலோ 
வாழைக்காய் ------------------------------------------------------------------இரண்டு 
கொத்தவரங்காய் -------------------------------------------------------------நூறு கிராம் 
பச்சைமிளகாய் -----------------------------------------------------------------நூறு கிராம் 
கறிவேப்பிலை ------------------------------------------------------------------ஒரு பிடி 
முருங்கைக்காய் ---------------------------------------------------------------இரண்டு 

தேவையான பொருட்கள் 




தேங்காய் ---------------------------------------------------------------------------------ஒன்று 
சீரகம் ------------------------------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் --------------------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
தயிர் ----------------------------------------------------------------------------------------------நான்கு கப்  
செய்முறை 

காய்களை ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்
காய்களை கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும் தேவையான உப்பு போடவும் .தேங்காய் ,ஜீரகம் ,பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் 
நன்றாகமைய அரைக்க வேண்டும் .அதை வெந்த காயில் கொட்டி நன்றாக கிளறி விடவேண்டும் மசிக்க கூடாது .கீழே இறக்கி வைத்து தேங்காய் எண்ணையை பச்சையாக ஊற்றவேண்டும் .கொஞ்சம் ஆறியதும் தயிரை 
கடைந்து ஊற்றவேண்டும் தயிர் கெட்டியாக இருக்கவேண்டும்கறிவேப்பிலையை போடவும் .இலேசாக கிளறி விடவேண்டும் 
கம கம அவியல் தயார் .இலையிலஅதை பரிமாறினால் அதன் அழகே தனிதான் .

Friday, February 7, 2020

syamalas Arusuvai virunthu: adai

syamalas Arusuvai virunthu: adai:  அடை அடை என்பது சிறந்த டிபன் .ஏனென்றால் இதில் ப்ரோட்டீன் ,கொழுப்பு ,,நார் ,சத்து,பொட்டாசியம் ஆகியவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கிறது ...

adai

 அடை
அடை என்பது சிறந்த டிபன் .ஏனென்றால் இதில் ப்ரோட்டீன் ,கொழுப்பு ,,நார் ,சத்து,பொட்டாசியம் ஆகியவை சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கிறது .மேலும் இதன் ருசியோ ஆகா ............ இதை ஹோட்டலில் போடும் அன்று கூட்டம் அலைமோதும் .அப்படிப்பட்ட டிபன் நாமே செய்தால் அதன் சுகமே தனி .இது செய்வது மிக மிக சுலபம் .நீங்களும் செய்து அசத்துங்கள் பார்ப்போம்



தேவையான பொருட்கள்

கடலை பருப்பு -----------------------------------------------ஒருகப்
துவரம் பருப்பு -------------------------------------------------அரைசுப்
பச்சரிசி ------------------------------------------------------------அரைசுப்
உளுத்தம் பருப்பு -----------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -----------------------------------------------ஐந்து
பெருங்காயம்     ----------------------------------------------------கால்  ஸ்பூன்
தேங்காய் --------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் (சிறு சிறு பல்லாக நறுக்கி கொள்ள வேண்டும் )
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு கொத்து
கொத்தமல்லி -----------------------------------------------------------------ஒரு பிடி நறுக்கியது
தேவையான உப்பு
அடை வார்க்க  எண்ணெய்

  பருப்புகள்  அரிசி இவற்றை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து
பின் தண்ணீரை வடித்து மிளகாய் உப்பு சேர்த்து கர கர என மிக்ஸியில்
அரைத்து எடுக்க வேண்டும் .பின் கறிவேப்பிலை ,கொத்தமல்லி ,தேங்காய்
சேர்த்து நன்கு கலக்கவேண்டும் .தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இட்லிமாவு
பதத்தில் இருக்க வேண்டும் .அடுப்பில் தோசை கல்லை போட்டு நன்கு காய்ந்ததும் எண்ணெய் தடவிய பின் அடை மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக பரப்பவேண்டும் .அதில் நடுவில் சிறிய ஓட்டை போட்டு அதில்
எண்ணெய் ஊற்ற வேண்டும் சுற்றிலும் ஒரு ஸ்பூன்  எண்ணெய் ஊற்றவேண்டும் அடுப்பை நிதானமாக எரிய விடவேண்டும் .ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்தது ம் மறு  பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாகி வந்ததும் எடுத்து பறிமாற வேண்டும்
இதற்க்கு சைடு டிஷ் வெண்ணை ,வெல்லம் அவியல் ஆகியவை
போட்டு சாப்பிட ஹோட்டல் அடையை விட உங்கள் அடை தான் சூப்பர்



Monday, January 27, 2020

syamalas Arusuvai virunthu: agathikeerai poriyal

syamalas Arusuvai virunthu: agathikeerai poriyal: aஅகத்தி கீரை அகத்தி கீரை உடல் சூட்டை குறைக்கும் .வயிற்று புண்ணை ஆற்றும் .குடல் புழுக்களை நீக்கும் .இது பொரியல் மட்டுமே செய்யமுடியும் .இந்...

agathikeerai poriyal

Image result for agathikeeraiaஅகத்தி கீரை

அகத்தி கீரை உடல் சூட்டை குறைக்கும் .வயிற்று புண்ணை ஆற்றும் .குடல் புழுக்களை நீக்கும் .இது பொரியல் மட்டுமே செய்யமுடியும் .இந்த கீரையை
உருவி எடுத்து நன்கு தண்ணீர் விட்டு அலசி எடுக்கவேண்டும் .இதில் பழுப்பு
இலை இருந்தால் அதை எடுத்து விடவேண்டும் இல்லாவிட்டால் உடலுக்கு
ஒத்துக்கொள்ளாமல் loosemotion ஏற்படும் அபாயம் ஏற்படும் இந்த பொரியல்
செய்வது மிக சுலபம் ..

செய்முறை

இந்த கீரையை கத்தியால் நறுக்கவோ அரிவாள் மனையில் நறுக்கவோ கூடாது .அவ்வாறு செய்தால் கசப்பு தன்மை ஏற்படும் ..கையால் பிய்த்து
துண்டுகளாக்கவும் .வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு
அதில் ஒருஸ்பூன் கடுகு ,இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு இரண்டு காய்ந்த
 மிளகாய்  போட்டு தாளித்து அதில் கீரையை போட்டு கிளறி தேவையான
உப்புபோட்டு கிளற வேண்டும் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
சர்க்கரை போட்டு கிளறி இறக்க வேண்டும்
அவ்வளவு தான்  பொரியல் ரெடி 

Thursday, January 23, 2020

syamalas Arusuvai virunthu: kuzhi paniyaram

syamalas Arusuvai virunthu: kuzhi paniyaram: குழி பணியாரம்  தினமும் இட்லிதானா என சலித்து கொள்பவர்களுக்கு இதோ ஒரு அருமையான காலை டிபன் ரெடி .சுலபமாக அதே நேரம் வீட்டில் உள்ள  பொருளை ...

kuzhi paniyaram

குழி பணியாரம் 

தினமும் இட்லிதானா என சலித்து கொள்பவர்களுக்கு இதோ ஒரு அருமையான காலை டிபன் ரெடி .சுலபமாக அதே நேரம் வீட்டில் உள்ள 
பொருளை கொண்டு பத்து நிமிடத்தில் டிபன் செய்து அசத்தலாம் .அதுதான் 
குழி பணியாரம் .

தேவையான பொருட்கள் 

இட்லிமாவு ---------------------------------------------------------------------------இரண்டு  கப் 
பெரியவெங்காயம் ----------------------------------------------------------------ஒன்று (பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் )
காரட் -------------------------------------------------------------------------------------ஒன்று (துருவி கொள்ளவேண்டும் )
பச்சை மிளகாய் --------------------------------------------------------------------இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் )
தேங்காய் துருவல் -------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை ----------------------------------------------------------------------ஒரு கொத்து 
எண்ணெய் ------------------------------------------------------------------------------பொரிப்பதற்கு தேவையான அளவு 






வறுத்து கொள்ள 
கடலை பருப்பு -----------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கடுகு ---------------------------------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு ----------------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
முந்திரி (இருந்தால்)-----------------------------------------------------------------ஐந்து (பொடியாக உடைத்து கொள்ளவேண்டும் )

வறுத்து கொள்ள வேண்டிய பொருளை எண்ணெய் ஒருஸ்பூன் விட்டு 
பொன்னிறமாக வறுத்து மாவில் கொட்டவேண்டும் .நறுக்கிய காய்களை மாவில்போட்டு உப்பு தேவையான அளவு போட்டு நன்கு கலக்க வேண்டும் 
குழி பணியார வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவேண்டும் 
எண்ணெய் காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் ஊற்ற வேண்டும் பொன்னிறமாக வந்ததும் திருப்பி விடவேண்டும் .பொன்னிறமாக 
வந்ததும் எடுத்து வைக்கவும் .பார்ப்பதற்கு அழகான பணியாரம் ரெடி 
அதற்கு  தேங்காய் சட்னி தொட்டு கொண்டு சாப்பிட சூப்பர் காம்பினேஷன் 


 

  

Wednesday, January 22, 2020

syamalas Arusuvai virunthu: milagu kuzhambu

syamalas Arusuvai virunthu: milagu kuzhambu: மிளகு குழம்பு மிளகு குழம்பு பிரசவித்தவர்களுக்கு போடுவதால் இதை பிரசவ குழம்பு என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள் .இது சாப்பாடு பிடிக்காமல...

milagu kuzhambu

மிளகு குழம்பு

மிளகு குழம்பு பிரசவித்தவர்களுக்கு போடுவதால் இதை பிரசவ குழம்பு என்று
கிராமப்புறங்களில் கூறுவார்கள் .இது சாப்பாடு பிடிக்காமல் இரூபவ்ர்கள்
சாப்பிட்டால் ஜீரண சக்தி ஏற்பட்டு சாப்பாடு செல்லும் .இது மருத்துவ குணம்
உடையது


இது செய்ய தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
 துவரம் பருப்பு -----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் --------------------------------------------------------------ஐந்து
மிளகு -----------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
ஜீரகம் -------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் பொடி-----------------------------------------------ஒரு ஸ்பூன்
நல்ல எண்ணெய் --------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பி  லை ------------------------------------------------------------ஒரு பிடி
மேற்கூறிய பொருட்களை ஒருஸ்பூன்சூடான  எண்ணெய் விட்டு பொன்னிறமாகv
வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவேண்டும்
-ஒரு எலுமிச்சை அளவு புளியை நன்கு கரைத்து அதில் அரைத்த பொடியை
கரைத்து தேவையானஉப்பு போட்டு நன்கு கொதி க்க விடவேண்டும்
மீதமுள்ள எண்ணையைகரைசலில்  ஊற்றி அடுப்பை  சிறியதாக வைக்கவேண்டும்
எண்ணெய் மிதந்து பிரிந்து வரும் பொழுது அடுப்பில்இருந்து இறக்கவேண்டும்  இதன்   வாசனை ஊரையே தூக்கும் சூடான சாதத்தில் போட்டு நல்லஎண்ணை அல்லது நெய்விட்டு சாப்பிட பேஷ் பேஷ் பிரமாதம் என சொல்ல தோன்றும்



Monday, January 20, 2020

syamalas Arusuvai virunthu: carrat halwa

syamalas Arusuvai virunthu: carrat halwa: காரட் அல்வா காரட் பூமியின் கீழ் விளையும் கிழங்கு  வகையை சேர்ந்தது .இது மிகவும் சத்துள்ளது .இது கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது .மிக சுலபமாக...

carrat halwa

Image result for carratகாரட் அல்வா
காரட் பூமியின் கீழ் விளையும் கிழங்கு  வகையை சேர்ந்தது .இது மிகவும் சத்துள்ளது .இது கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது .மிக சுலபமாக செய்ய
கூடிய இனிப்பு வகையை சேர்ந்த அல்வா செய்ய  ஏற்றது .இது
மிகவும் ருசியுள்ளது .
தேவையான பொருட்கள்

காரட் துறுவியது --------------------------------------------------நான்கு கப்
பால் ----------------------------------------------------------------------நான்கு கப்
சர்க்கரை ---------------------------------------------------------------ஒரு கப்
நெய் --------------------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்பொடி -----------------------------------------------------ஒரு ஸ்பூன்
முந்திரி -------------------------------------------------------------------இருபது
காய்ந்த திராக்ஷை ---------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன்

செய்   முறை
காரட் துருவலில் பாலை ஊற்றி வேக வைக்க வேண்டும் .குக்கரில்
வேகவைப்பது சுலபம் .வெந்ததும் அதை ஒரு வாணலியில் கொட்டி
அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும் .கெட்டியாக வந்ததும்
ஏலக்காய்பொடி சேர்த்து கிளற வேண்டும் .நெய்யில் முந்திரியைபொன்னிறமாக வறுத்துஅத்துடன் திராஷையை போட்டு பொரித்து அல்வாவில் கொட்ட வேண்டும் .அல்வாவை நன்கு கிளறி எடுக்கவேண்டும்
அல்வா வின் கலரும் ருசியும் மிக பிரமாதம் ..




  .

Saturday, January 11, 2020

syamalas Arusuvai virunthu: sarkarai pongal

syamalas Arusuvai virunthu: sarkarai pongal: சர்க்கரை பொங்கல் பொங்கல் திருநாள் வர உள்ளது .தமிழ் மக்கள் மிக சிறப்பாக கொண்டாடும் பண்டிகை பொங்கல் திருநாள் .இதை தைமாதம் முதல் நாள் கொண்ட...

sarkarai pongal

சர்க்கரை பொங்கல்

பொங்கல் திருநாள் வர உள்ளது .தமிழ் மக்கள் மிக சிறப்பாக கொண்டாடும்
பண்டிகை பொங்கல் திருநாள் .இதை தைமாதம் முதல் நாள் கொண்டாடுவோம் .இதை உழவர் திருநாள் என்பர் .உழவர்களின் அருமையை
உணர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இது .அன்று சர்க்கரை
பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைத்தது பின் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு கொண்டாடுவார்கள் .அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை இது .அன்று செய்யும்
பொங்கலை எவ்வாறு மிக சுவையாக செய்வது என்பதை கூறுகிறேன்
நீங்களும் செய்து மகிழ்ச்சி யாக கொண்டாடுங்கள்

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி -----------------------------------------------------ஒரு கப்
பயத்தம் பருப்பு -------------------------------------------------கால் கப்
வெல்லம் -----------------------------------------------------------இரண்டு கப்
முந்திரி ---------------------------------------------------------------இருபத்தி ஐந்த( சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் )

ஏலக்காய் தூள் -------------------------------------------------------ஒருஸ்பூன்
காய்ந்த திராக்ஷை ---------------------------------------------------ஒரு பிடி
நெய் --------------------------------------------------------------------------அரை கப்
பால் ----------------------------------------------------------------------------ஒரு கப்


செய்முறை

பயத்தம்   பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவேண்டும் பின் அரிசி
பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு ஒரு கப் பால் நான்கு கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும் வரை வைத்து இறக்க வேண்டும் .ஒரு வாணலியில்இரண்டு ஸ்பூன் நெய்விட்டு  முந்திரி திராக்ஷை இரண்டையும்
பொரித்து எடுத்து வைக்கவேண்டும் .அந்த வாணலியில் வெல்லத்தை
போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சு வெல்லம் கரைந்ததும் அதை
வடிகட்டியில் வடிகட்டி திரும்ப வைத்து கெட்டியாக வரும்வரை கொதிக்க
விடவேண்டும் .ரொம்ப கெட்டியாக கூடாது .குக்கரை திறந்து சாதத்தை
நன்கு மசிக்க வேண்டும் .பிறகு வெல்ல பாகை அதில் கொட்டி நன்றாக
கிளறி அடுப்பை சிறியதாக வைத்து அதில் குக்கரை வைத்து ஏலக்காய்,
முந்திரி ,திராக்ஷை மீதமுள்ள நெய் ஆகியவற்றை கொட்டி கிளறி   சிறிது
கெட்டி ஆனதும் இறக்கி வைக்கவும் .பொங்கல் தயார்

பொங்கலோ   பொங்கல் என கூறி சூரியனுக்கு நைவேத்தியம் செய்து மிக
சிறப்பாக பொங்கலை கொண்டாடுங்கள்
 ,


Thursday, January 9, 2020

syamalas Arusuvai virunthu: thiruvathirai kuzham

syamalas Arusuvai virunthu: thiruvathirai kuzham: திருவாதிரை குழம்பு இதற்கு முன் திருவாதிரை களி செய்வது கூறினேன்அதற்கு ஏற்றாற்போல் கூட்டு எனப்படும் திருவாதிரை குழம்பு செய்வது எப்படி என்ப...

thiruvathirai kuzham

திருவாதிரை குழம்பு

இதற்கு முன் திருவாதிரை களி செய்வது கூறினேன்அதற்கு ஏற்றாற்போல்
கூட்டு எனப்படும் திருவாதிரை குழம்பு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
அதற்கு ஏழு காய்கள் தேவை .கத்தரிக்காய் ,அவரைக்காய் ,உருளை கிழங்கு ,
சேப்பங்கிழங்கு .சேனைக்கிழங்கு ,மொச்சை ,வாழைக்காய்பூசணி காய் ,பரங்கி காய்   இவைகளை நன்றாக கழுவி ஒரே அளவில் நறுக்க வேண்டும் (இதில் கிடைக்கும் காய்களை )போடலாம் .அதில் எலுமிச்சை அளவு புளியை

கரைத்து காய் களை உப்பு போட்டு கொதிக்க வைக்கவேண்டும் .ஒரு
வாணலியில் ஒரு ஸ்பூன் தனியா ,இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு இருபது
மிளகாய் அரை கப் தேங்காய் துருவல் ஆகியவைகளை ஒருஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும் .ஆறியபின்
மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும் ..குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பை வேகவைத்து தனியாக வைக்கவேண்டும் காய்கள் நன்றாக
வெந்ததும் பருப்பை நன்றாக மசித்து அதில் ஊற்றவேண்டும் .அரைத்து
வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்
அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெயில் ஒரு ஸ்பூன் கடுகு இரண்டு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டவேண்டும் .இரண்டு கொத்து கறிவேப்பிலை
போட்டு கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் இப்பொழுது
களிக்கு ஏற்ற சாம்பார் தயார் இனி என்ன ஆருத்ரா தரிசனம் நைவேத்தியம்
தயார் .அனைவரது சபாஷ் என்ற பாராட்டு உங்களுக்கு தான் .ஜமாயுங்கள் 

Wednesday, January 8, 2020

syamalas Arusuvai virunthu:  திருவாதிரை களி மார்கழி மாதம் சிவனுக்கு திருவாத...

syamalas Arusuvai virunthu:

 திருவாதிரை களி 
மார்கழி மாதம் சிவனுக்கு திருவாத...
:  திருவாதிரை களி  மார்கழி மாதம் சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று களி செய்து சிவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம் அந்த நாளை ஆருத...


 திருவாதிரை களி 

மார்கழி மாதம் சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று களி செய்து சிவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம் அந்த நாளை ஆருத்ரா தரிசனம் 
என்று கூறுவார்கள்  களி செய்யும் முறையை பற்றி கூறுகிறேன் 
தேவையான பொருட்கள் 
பச்சை அரிசி ----------------------------------------------அரை கப் 
பயத்தம் பருப்பு -------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
வெல்லம்------------------------------------------------------ஒரு கப் 
தேங்காய் துருவல் ----------------------------------------அரைசுப் 
ஏலப்பொடி ------------------------------------------------------ஒருஸ்பூன் 
முந்திரிப்பருப்பு ------------------------------------------------இருபது (சிறு துண்டுகளா க்கு )
நெய் ------------------------------------------------------------------நான்கு டேபிள் ஸ்பூன் ,மீதம 




செய்முறை 

அரிசி ,பயத்தம்பருப்பு  இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுக்க வேண்டும் .ஆறியபின் மிக்ஸியில் ரவைப்பதத்திற்கு அரை க்கவேண்டும் 
ஒரு பாத்திரத்தில் மூன்று  கப் தண்ணீர்விட்டுரவையை போட்டு குக்கரில் இரண்டு விசில் வரஅடுப்பில் . வைக்கவேண்டும்  வெல்லத்தைஒரு பாத்திரத்தில்  போட்டுஒரு கப் தண்ணீரில்  கொதிக்க வைக்க வேண்டும்வெல்லம் கரைந்ததும் 
அதை வடிகட்டியலில் வடிகட்டவேண்டும் .ஏனென்றால் வெல்லத்தில் மண் 
இருக்கும் .,பிறகுவெந்த ரவையில் வெல்லப்பாகு தேங்காய் துருவலை 
கொட்டி நன்றாக கிளற வேண்டும்  ஏலக்காய் தூள் போடவும் .முந்திரியை 

இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுத்துகளி யில்  போடாவும்  மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கவும் 

ஜனவரி பத்தாம் தேதி திருவாதிரை பண்டிகை வருவதால் அனைவரும் 
 களி செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் 
 .
;  


விட வேண்டும் .வெள்ளம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டியில் 
வடிகட்ட வேண்டும் .ஏனென்றால் வெல்லத்தில் மண் இருக்கும் 


Tuesday, January 7, 2020

syamalas Arusuvai virunthu: vepampoo rasam

syamalas Arusuvai virunthu: vepampoo rasam: வேப்பம்பூ ரசம் வேப்பம்பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .இதுவயிற்று கோளாறு ,பித்தம் இவைகளுக்கு மிக நல்லது.இதில் ரசம் ஐ ந்து நிமிடத்த...

vepampoo rasam


வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .இதுவயிற்று கோளாறு ,பித்தம் இவைகளுக்கு மிக நல்லது.இதில் ரசம் ஐ ந்து நிமிடத்தில்
வைக்கலாம் .இந்த ரசம் சாப்பிட மிக ருசியாகவும் இருக்கும் .உடலுக்கும் நல்லது

தேவையான பொருட்கள்

வேப்பம்பூ ------------------------------------------------------- அரை     கப்
புளி -----------------------------------------------------------------ஒரு பெரிய எலுமிச்சை அளவு

மிளகாய் ------------------------------------------------------------நான்கு
கடுகு -----------------------------------------------------------------ஒரு டீஸ்பூன்
உப்பு -------------------------------------------------------------------தேவையான அளவு
பெருங்காயம் ------------------------------------------------------அரை டீஸ்பூன் 
 கறிவேப்பிலை -----------------------------------------------------இரண்டு கொத்து
எண்ணெய் ------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்

 
.


செய்முறை
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து ஒரு பாத்திரத்தில்
விடவேண்டும் .தேவையான உப்பு போடவேண்டும்  .பெருங்காயம் போடவேண்டும் .அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்
 அதில் ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு ,மிளகாய் ,போட்டு வெடிக்கவிட்டு  வேப்பம்பூ போட்டு வறுத்து (கருப்பாக ).கொட்டவேண்டும் பிறகு நன்றாக
இரண்டு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு ஒருகப் தண்ணீர் விட்டு
நுரைத்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்

இதை அப்படியே யும் குடிக்கலாம் .சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்


Sunday, January 5, 2020

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi: திடீர் புளியோதரைப்பொடி  புளி சாதம் என்னும் புளியோதரை யை  விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது  ...

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi

syamalas Arusuvai virunthu: instant puliyitharai podi: திடீர் புளியோதரைப்பொடி  புளி சாதம் என்னும் புளியோதரை யை  விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது  ...

instant puliyitharai podi

திடீர் புளியோதரைப்பொடி 

புளி சாதம் என்னும் புளியோதரை யை  விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .அதை நினைத்தவுடன் பண்ணு வது என்பது 
கஷ்டம் .ஆனால் இப்பொழுது இன்ஸ்டன்ட் பொடிகள் வந்து விட்டது .
கடையில் வாங்கும் பொடி வீணாகாமல் இருக்க சில ரசாயன பொருட்களை 
சேர்க்கிறார்கள் .இது உடலுக்கு கெடுதியை விளைவிக்கும் .நாம் வீட்டிலேயே 
அதை செய்யும் முறையை நான் இங்கு கூறுகிறேன் .இதை நீங்களும் செய்து 
நல்ல புளியோதரையை செய்து அனைவரையும்மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள் 
தேவையான பொருட்கள் 

புளி  ---------------------------------------------------------------------நூறு கிராம் அதாவது ஒரு சாத்துக்குடி அளவு 

கடலைப்பருப்பு -----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு ----------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன் 
மிளகு ----------------------------------------------------------------------ஒரு டீஸ்  ஸ்பூன் 
தனியா --------------------------------------------------------------------மூன்று டேபிள் ஸ்பூன் 
மிளகாய் -------------------------------------------------------------------இருபது 
பெருங்காயம் ------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
வெந்தயம் ------------------------------------------------------------------ஒருஸ்பூன் 
வெல்லம் ---------------------------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை -------------------------------------------------------------ஒரு பிடி 
வேர்க்கடலை தோல் நீக்கியது --------------------------------------ஒரு கப் 
நல்ல எண்ணெய் ------------------------------------------------------------அரைசுப்( அல்லது)தேவையான அளவு 
 கடுகு ---------------------------------------------------------------------------------ஒரு ஸ்பூன் 


செய்முறை 

கடுகு ,வெல்லம் ,கறிவேப்பிலை ,வேர்க்கடலை  எண்ணெய் தவிர மற்ற 
பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் நன்றாக 
பொடியாக அரைத்து எடுக்கவும்  கறிவேப்பிலையை தேவையான உப்புடன் 
சேர்த்து வறுத்து எடுக்கவும் .உப்பில் நீர் இருக்கும் என்பதால் வறுக்க    வேண்டும்  .பின்பு  வேர்க்கடலை வெல்லம் கறிவேப்பிலை உப்பு  அத்துடன் கலந்து ஆறியதும்பாட்டலில்போட்டு வைக்கவும் ..இதுவே இன்ஸ்டன்ட் 
புளியோதரை பொடி இது மாதக்கணக்கில் வீணாகாது 

புளியம் சாதம் செய்யும் முறை 

சாதம் செய்து ஒரு அகலமான தட்டில் ஆறவைத்து நல்ல எண்ணெய் ஊற்றி 
அதில் தேவையான அளவு பொடி போட்டு கலக்க வேண்டும்   
ஹையா 

ரம்மியமான புளியோதரை ரெடி .

 
   

 

Friday, January 3, 2020

syamalas Arusuvai virunthu: chillipaneer

syamalas Arusuvai virunthu: chillipaneer: aசில்லி பன்னீர் சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று . ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர...

syamalas Arusuvai virunthu: chillipaneer

syamalas Arusuvai virunthu: chillipaneer: aசில்லி பன்னீர் சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று . ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர...

syamalas Arusuvai virunthu: chillipaneer

syamalas Arusuvai virunthu: chillipaneer: aசில்லி பன்னீர் சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று . ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர...

chillipaneer

Image result for chillipaneeraசில்லி பன்னீர்
சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று .
ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர் ஆர்டர் செய்வார்கள் .வீட்டில் ஏதாவது விசேஷம்பிறந்தநாள் பார்ட்டி மற்றும் நியூயர்ஸ் பார்ட்டி ஆகியவற்றிற்கு விருந்துகளில் முதலிடம் வகிப்பது சில்லி பன்னீர் தான் இதை செய்வதில் என் மருமகள் expert .அவளிடம் இதை கற்றுக்கொண்டேன் இங்கிலாந்தில் இது இல்லாமல் ஒரு பார்ட்டியும் இல்லை ..இதை சுலபமாக வீட்டில் செய்யும் முறையை கூறுகிறேன் .நீங்களும் செய்து வீருந்தினர்களை அசத்துங்கள்

தேவையான பொருட்கள்

பன்னீர் --------------------------------------------------------- முன்னூறு கிராம்
cornflour ----------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் பச்சை,மஞ்சள் ,சிகப்பு -----------தலா ஒன்று ஆக மூன்று
பெரிய வெங்காயம் ----------------------------------------நான்கு
இஞ்சி -------------------------------------------------------------இரண்டு அங்குல நீளம்
பூண்டு --------------------------------------------------------------பத்து பல்
பச்சைமிளகாய் ---------------------------------------------------இரண்டு
எண்ணெய் -----------------------------------------------------------இரெண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
கார்ன் flour மாவை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து கொள்
பன்னீரை இரண்டு சென்டிமீட்டர் அளவு cube சதுரமாக நறுக்கு
கால் ஸ்பூன் மிளகு பொடி போடு
கார்ன் மாவு ,மிளகுப்பொடி சேர்த்து பன்னீர் துண்டுகளை பிசறி பத் து  நிமிடம்
ஊற வை
பின் எண்ணெய்யில் வறுத்து எடு
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் மூன்றையும் நன்றாக மசியஇடித்து  எடு
வெங்காயம் குடைமிளகாய் இவைகளை ஒரு சென்டிமீட்டர் நீள அகலம்
உள்ள துண்டுகளாக நறுக்கு
இஞ்சி ,பூண்டு மிளகாய் கலவையை எண்ணெய் விட்டு வதக்கு
அத்துடன் கறிகாய் துண்டுகளை போட்டு முக்கால் வேக்காட்டில் வதக்கி எடு
அதில் டொமட்டோ சாஸ் (tomatto sauce) , சில்லி சாஸ் (chilli sauce) ,சோயா சாஸ் (soya sauce) மூன்றும் தலா  ஒரு டேபிள் ஸ்பூன்
ஊற்றி கலந்து பின் வறுத்த பன் னீரைசேர் நன்றாக கலந்து வை
அத்துடன் கொத்தமல்லி தழையை தூவு
அழகான நிறத்துடன் சில்லி பன்னீர் ரெடி