Thursday, December 19, 2019

masala pasta


மசாலா பாஸ்டா

எல்லோரும் என்னை இருபது வருடங்களாக பாஸ்டா சாப்பிட வைக்க முயற்சித்தார்கள் .ஆனால் ஏனோ நான் சாப்பிட மறுத்தேன் .தீடீரென்று

மசாலா போட்டு பாஸ்டா செய்து பார்ப்போம் என களத்தில் இறங்கி
விட்டேன் .மேலே தட்டில் உள்ளது நான் செய்த மசாலா பாஸ்டா .என்ன
சூப்பராக இருக்கா பார்க்க ?சாப்பிட்டதும் எல்லோரும் ஆஹா ஓஹோ
என புகழ்ந்தார்கள் .என் மகன் உடனே போட்டோ எடுத்து அசத்திவிட்டான்
நீங்களும் செய்துதான் பாருங்களேன்

தேவையான பொருட்கள்
பாஸ்டா ------------------------------------------------------ஒரு கப்
காய்கள் ================================= வெங்காயம் ஒன்று ,ஒரு காரட் ,
பீன்ஸ் இருபது ,குடைமிளகாய் ஒன்று ,இஞ்சி இரண்டு அங்குலம் ,தக்காளி
பெரியது இரண்டு ,பூண்டு பாத்து பல் சீஸ் துருவியது ஒரு கப்
காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிவை
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் ,மசாலா பொடி ஒருஸ்பூன்

செய்முறை
இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாககொதிக்க வை ,
அதில் பாஸ்டாவை போடுஒரு ஸ்பூன் எண்ணெய் விடு அப்பொழுதான் ஒன்றொடுஒன்று ஒட்டாது .அரைஸ்பூன் உப்பு போடு ,முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டியில் வடிகட்டு .அந்த தண்ணீரை கொட்டாமல் வை .
இஞ்சி ,பூண்டு இரண்டையும் மிக்ஸியில் அரைத்து விழுதாக வை .தக்காளியைதண்ணீரில் வேகவைத்து தோலை உரித்து மிக்ஸியில்
அரைத்து கூழாக வை ..
ஒருவாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு
 விழுதைவதக்கு .அதில் முதலில் வெங்காத்தை பொன்னிறமாக வதக்கு
அதில் மற்ற காய்களை போட்டு வதக்கு .அதில் தக்காளி கூழை  கொட்டு
அதிலொரு ஸ்பூன் மிளகாய் தூள் போடு .ஒரு ஸ்பூன் மசாலா பொடி
போடி நன்றாக கிளறு பாஸ்டா வில் இருந்து வடிகட்டிய தண்ணீர் அரைசுப் சேர்த்து காய்களை முக்கால் பதத்திற்கு வேகவை .உப்புஅளவாக போடு
பாஸ்டாவை அதிபோட்டு நன்கு கிளறி பச்சை வாசனை போனதும் இறக்கி வை துருவிய சீஸ் போடு கொத்தமல்லி போட்டு அலங்கரி .
இப்பொழுது மசாலா வாசனையுடன் பாஸ்டா ரெடி .து செய்வதும் சுலபம்
உடலுக்கும் நல்லது .நீங்களும் செய்து பாருங்கள்ஸ்்




. ,

Tuesday, December 17, 2019

syamalas Arusuvai virunthu: masal vadai

syamalas Arusuvai virunthu: masal vadai: மசால் வடை மசால் வடை எலிகளை பிடிக்க எலிப்பொறியில் வைப்பார்கள் .அந்த வாசனைக்கு எலி எங்கிருந்தாலும் ஓடி வந்து வடையை தின்ன எலிப்பொறியின் உள்ள...

masal vadai

மசால் வடை

மசால் வடை எலிகளை பிடிக்க எலிப்பொறியில் வைப்பார்கள் .அந்த வாசனைக்கு எலி எங்கிருந்தாலும் ஓடி வந்து வடையை தின்ன எலிப்பொறியின் உள்ளே வந்து மாட்டிக்கொள்ளும் .அப்படிப்பட்ட வடைக்கு
முன் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் ?அந்த வடை செய்யும் முறையை
பார்ப்போம்
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு -------------------------------------------ஒருகப்
துவரம்பருப்பு -----------------------------------------------கால் கப்
எண்ணெய் ----------------------------------------------------கால் லிட்டர்
பெரிய வெங்காயம் ---------------------------------------ஒன்று
பச்சைமிளகாய் ----------------------------------------------இரண்டு
கறிவேப்பிலை -----------------------------------------------ஒரு கொத்து
 கொத்தமல்லி --------------------------------------------------ஒரு பிடி
சோம்பு ===================================ஒரு டீஸ்பூன்

செய்முறை

பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் உறவைக்கவேண்டும்
வெங்காயம் ,பச்சைமிளகாய் இரண்டையும்போடியாக நறுக்கி வைத்து
கொள்ளவேண்டும .பருப்பை நன்றாக வடிய வைத்து மிக்ஸியில் நறநற
என்று இருக்குமாறு அரைத்து எடு க்கவேண்டும் .அத்துடன் நறுக்கிய
வெங்காயம் ,பச்சைமிளகாய் சோம்பு  ,கறிவேப்பிலை,கொத்தமல்லி
தேவையான உப்பு போட்டு கலக்கவேண்டும்வாணலியில்எண்ணெய் ஊற்றி
அடுப்பில் வைக்கவேண்டும் .  .மாவை நெல்லிக்காய் அளவு இலை அல்லது
aluminiumfoil வட்டமாக தட்டி எண்ணெய் கா ய் ந்ததும் போட்டு பொன்னிறமாக
வந்ததும் ஜல்லி கரண்டியால் எடுத்து எண்ணெய் வடியும் படி பாத்திரத்தில்
வைக்க வேண்டும் .இதற்கு தேங்காய் சட்டினி அல்லது சாம்பாருடன்
சாப்பிட சூப்பரோ சூப்பர் 
பின்குறிப்பு
வெங்காயம் சோம்பு போடாமல் செய்வது ஆமை வடை என்பார்கள்
இதை சமாராதனை ,கல்யாணம் போன்றவற்றில் செய்வார்கள் .

Monday, December 16, 2019

syamalas Arusuvai virunthu: vegetablecuruma

syamalas Arusuvai virunthu: vegetablecuruma: விஜி டேபிள்   குருமா விஜி டேபிள் குருமாசப்பாத்தி .பூரி ஆகிய வற்றிற்கு   ஒரு ஸ்பெஷல் டிஷ் இதை சமைக்கும் பொழுதே வாசனை ஊரையே தூக்கும் .அது ...

vegetablecuruma

விஜி டேபிள்   குருமா

விஜி டேபிள் குருமாசப்பாத்தி .பூரி ஆகிய வற்றிற்கு   ஒரு ஸ்பெஷல் டிஷ்
இதை சமைக்கும் பொழுதே வாசனை ஊரையே தூக்கும் .அது சுலபமாக செய்யும் முறையை விளக்குகிறேன் .
தேவையான காய்கள்( ஆறுநபர்களுக்கு
பெரிய வெங்காயம் ,------------------------ஆறு
பீன்ஸ் --------------------------------------------நூறு கிராம்
காரட் -----------------------------------------------மூன்று
பச்சை பட்டாணி ---------------------------------நூறு கிராம்
சௌசௌ --------------------------------------------ஒன்று
இஞ்சி ----------------------------------------------------இரண்டு அங்குலம்
பச்சை மிளகாய் ------------------------------------------ஐந்து
கொத்தமல்லித்தழை ----------------------------------ஒரு பிடி
உருளைக்கிழங்கு --------------------------இருநூறு கிராம்

அரைப்பதற்கு

ஏலம் -----------------------------------------------------------நான்கு
கிராம்பு ------------------------------------------------------ஒரு ஸ்பூன்
பட்டை -----------------------------------------------------ஒரு அங்குலம்
சோம்பு ------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
bayleaf ----இலை -------------------------------------------இரண்டு
கசகசா --------------------------------------------------------ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் --------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சி ,பச்சைமிளகாய் மற்றும் ,அரைப்பதற்கு உள்ளபொருட்களை
 மிக்ஸியில் அரைத்து விழுதாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்
உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவேண்டும்
 ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு அரைத்த விழுதை வதக்கவேண்டும்
அதில் காய் துண்டுகளைஇரண்டு நிமிடம்   உப்பு சேர்த்துவதக்க வேண்டும்
அதில் ஆறு கப் தண்ணீர் விடவேண்டும் .நன்றாக கொதித்து காய்கள் நன்றாக
வெந்ததும் உருளைகிழங்கைமசித்து போட்டு   பொட்டுக்கடலை மாவை கரைத்து விட்டுசிறிது நேரம்  நன்றாக கொதிக்க
விடவேண்டும் .பின்பு இறக்கி வைத்து கொத்தமல்லி தழையை பொடியாக
நறுக்கி அதில் போடவேண்டும்.இப்பொழுது ஹோட்டலை மிஞ்சும் குருமா
தயார் .





Thursday, December 12, 2019

syamalas Arusuvai virunthu: elumichampazha rasam

syamalas Arusuvai virunthu: elumichampazha rasam: எலுமிச்சபழம் ரசம்  இது ஒரு சுலபமான மிக ருசியான ரசம் .இதை சாதத்தில் பிசைந்தும்  சாப்பிடலாம் ,குடிக்கவும் செய்யலாம் .நாவுக்கு மிகவும் ருசி...

elumichampazha rasam

Image result for lemonஎலுமிச்சபழம் ரசம் 
இது ஒரு சுலபமான மிக ருசியான ரசம் .இதை சாதத்தில் பிசைந்தும் 
சாப்பிடலாம் ,குடிக்கவும் செய்யலாம் .நாவுக்கு மிகவும் ருசியாக 
இருக்கும் .
தேவையான பொருட்கள் 
எலுமிச்சம் பழம் --------------------------------------ஒன்று (நல்ல சாருவுள்ளது)
தக்காளி பழம் ------------------------------------------ஒன்று 
கொத்தமல்லி விதை --------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
கடலைப்பருப்பு ----------------------------------------ஒருஸ்பூன்  
ஜீரகம் --------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
 
மிளகு --------------------------------------------------------ஒரு ஸ்பூன் 
பச்சை மிளகாய் --------------------------------------இரண்டு 
பெருங்காயம் ------------------------------------------கால் ஸ்பூன் 
உப்பு ---------------------------------------------------------தேவையான அளவு 
கொத்தமல்லி தழை -----------------------------------பொடியாக நறுக்கியது ஒரு பிடி 
கடுகு -------------------------------------------------------அரை ஸ்பூன் 

செய்முறை 

கொத்தமல்லி விதை ,கடலை பருப்பு , ஜீரகம் ,மிளகு இவற்றை மிக்ஸியில் 

போட்டு அரை 
ஒருபாத்திரத்தில் நான்கு கப்தண்ணீர் விட்டு அதில் தக்காளியை பொடியாக   
நறுக்கி போட்டு அத்துடன் பச்சை மிளகாய் ,பெருங்காயம் ,உப்பு ஆகியவற்றை போட்டுநன்றாக கொதிக்க விடவேண்டும் .பின்பு 
மிக்ஸியில் அரைத்த பொடியை போட்டு இரண்டு கொதி வந்ததும் ஒரு கப்  
தண்ணீர் விட்டு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழையை போட்டு இறக்கி வை 
கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சப்பழத்தின் சாற்றை பிழிந்து கொ ட்டையை 
எடுத்து விட்டு சாற்றை ரசத்தில் ஊற்று ..கடுகை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து கொட்டு ..ரசம் ரெடி 
சூடாக இருக்கும் பொழுது எலுமிச்சை சாற்றை ஊற்றினால் ரசம் கசக்கும் .ஆகையால் ஆரியபின்பு தான் சாற்றை ஊற்ற வேண்டும் 
   

Tuesday, December 10, 2019

syamalas Arusuvai virunthu: vanky bath& moorkuzhambu

syamalas Arusuvai virunthu: vanky bath& moorkuzhambu: வாங்கி பாத் &மோர்க்குழம்பு வாங்கி பாத் என்பது மிகவும் ருசியான அதே சமயம் சுலபமான கலப்பு சாதம் இது இக்கால குழந்தைகள் விரும்பி சாப்பிடும்...

vanky bath& moorkuzhambu

Image result for brinjalவாங்கி பாத் &மோர்க்குழம்பு
வாங்கி பாத் என்பது மிகவும் ருசியான அதே சமயம் சுலபமான கலப்பு சாதம் இது இக்கால குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாதம் .இது என் அனுபவத்தில்
கண்டது .அதற்கு சைடு டிஷ் ஆக மோர் குழம்பும் இருந்தால் சூப்பரோ சூப்பர் ஆஹா
வாங்கி பாத் ற்கு  தேவையான பொருட்கள்
நல்ல கத்திரிக்காய் ----------------கால்கிலோ
அரிசி ------------------------------------இரண்டு கப்
கொத்தமல்லி விதை -------------ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு ----------------------ஒரு டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் ---------------------ஐந்து
கடுகு -------------------------------------ஒரு ஸ்பூன்
பெருங்காய தூள் -------------------கால்ஸ்பூன்
வேர்க்கடலை ------------------------அரை கப்
மஞ்சள் தூள் ---------------------------அரைஸ்பூன்
கறிவேப்பிலை ------------------------ஒரு கொத்த
எண்ணெய் ------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு ---------------------------------------தேவையான அளவு
செய்முறை
பொடியாக்கவதற்கு :   கொத்தமல்லி விதை ,கடலைப்பருப்பு மிளகாய் ஆகியவற்றை கொஞ்சம் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்துபின்
ஆறவைத்து மிக்ஸியில் பொடியாக்கு
கத்தரிக்காயைபொடியாக நறுக்கிவை
இரண்டு கப் அரிசியைகுக்கரில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சாதம் பண்ணு (சாதம் உதிரியாக இருக்க எண்ணெய்
சேர்க்கிறோம் )
சாதம் ஆனதும்  அதை ஆறவைக்கவேண்டும்
நறுக்கிய கத்திரிக்காயை எண்ணெயில் கடுகு வெடித்ததும் போட்டு
மஞ்சள் தூள் ,பெருங்காயத்தூள்வேர்க்கடலை  போட்டு நன்கு வதக்கு
மிக்ஸியில் அரைத்த பொடியை அதில் போட்டு நன்கு வதக்கு மீதமுள்ள
எண்ணெயை சேர் .தேவையான உப்பு ,கறிவேப்பிலை சேர் .
ஆறிய சாதத்தில் வதக்கிய கத்திரிக்காயை போட்டு கிளறு
.இப்பொழுது வாங்கி பாத் கம கம மணத்துடன் தயார்

இதற்கு தொட்டு கொள்ள மோர்க்குழம்பு தயார் செய்வதை பார்ப்போம்
மோர் குழம்பிற்கு போடவெண்டைக்காய் எடுத்து கொள்வோம்
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்_---------20
தயிர்-------------------------------2கப்
பச்சைமிளகாய்-------------4
சீரகம்-----------------------------1டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல்---------2டேபிள்ஸ்பூன்
கடலைமாவு--------------1டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு------------------1டேபிள்ஸ்பூன்
கடுகு---------------------------_1ஸ்பூன்
கறிவேப்பிலை--------_----1கொத்து
உப்பு---------------------_--தேவையான அளவு
எண்ணெய்-_-------------1டேபிள்ஸ்பூன்

செய் முறை
தேங்காய் துருவல் பச்சை மிளகாய்
சீரகம் மிக்ஸியில்அரைத்து வை
வெண்டைகாயைஒருஅங்குலநீளத்திற்குநறுக்கிவை அதைஎண்ணெய்விட்டுஉப்புபோட்டுவதக்கு
அரைத்துவைத்துள்ளவிழுதைதயிரில்கலந்துவதக்கியவெண்டைகாயில்ஊற்றுகடலைமாவுஅரிசிமாவுஇரண்டடையும்கரைத்துதயிர்கலவையில்
ஊற்றிஅடுப்பில்வைநுரைத்துபொங்கிவரும்பொழுதுகறிவேப்பிலை
போட்டுகடுகுதாளிக்கவேண்டும்
கொதிக்கவிடகூடாதுஇனிபறிமாறவேண்டியதுதான்மோர்குழம்பு
ரெடி









Monday, December 9, 2019

syamalas Arusuvai virunthu: vegetable biriyani

syamalas Arusuvai virunthu: vegetable biriyani:  விஜி டேபிள்   பிரியாணி தேவையான காய்கள் : வெங்காயம்ஐந்து  .கேரட் இரண்டு .பீன்ஸ்இருபது  பச்சை பட்டாணிஇரண்டு பிடி  .இஞ்சி இரண்டு அங்குலம் ....

vegetable biriyani

 விஜி டேபிள்   பிரியாணி

தேவையான காய்கள் : வெங்காயம்ஐந்து  .கேரட் இரண்டு .பீன்ஸ்இருபது  பச்சை பட்டாணிஇரண்டு பிடி  .இஞ்சி இரண்டு அங்குலம் .பச்சை மிளகாய் ஐந்து பூண்டு பத்து பல்
.

செய்முறை
காய்களை சிறிய துண்டுகளாக நறுக்க    வேண்டும் .வெங்காயத்தை நீள வாட்டில் நறுக்க வேண்டும்
பூண்டு .இஞ்சி ,பச்சை மிளகாய் சிறிது நெய் விட்டு வதக்க வேண்டும்
ஆறியதும் அத்துடன் பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு ,சோம்பு ,,தேங்காய் துருவல் ,புதினா தழை ஒரு கொத்து ,பத்து முந்திரி பருப்புகசகசா ஒரு டேபிள் ஸ்பூன்  ஆகியவற்றை போட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் .
.ஒரு கப் அரிசியைகளைந்து வடித்து ஒரு ஸ்பூன் நெய்விட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவேண்டும் .
நறுக்கி வைத்துள்ள காய்களை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்
விட்டு வதக்க வேண்டும் இலேசாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள
விழுதை அதில்போட்டு ஒரு கரண்டி கெட்டி தயிர் சேர்த்து கிளறி அத்துடன்
வறுத்த அரிசி சேர்த்து அனைத்தையும் ரைஸ் குக்கரில் போட்டு இரண்டு
கப் தண்ணீர் வி  ட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள்  போட்டு தேவையான உப்பு போட்டு
ரைஸ் குக்கரை மூடவேண்டும் ..நன்றாக வெந்ததும் முந்திரி பருப்பு நெய்யில்
தாளித்து அதில் போடவேண்டும் .கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதில் போட்டு கிளறி குக்கரை எடுத்து தனியாக வைக்கலாம் .
.இப்பொழுது கம கம என வாசனையுடன் பிரியாணி ரெடி.
இதற்கு வெள்ளரிக்காய் அல்லது வெங்காய தயிர் பச்சடி சரியான காம்பினேஷன்நீங்களும் பிரியாணி செய்து அசத்துங்கள் பார்ப்போம்  .


syamalacorner:

syamalacorner:

Wednesday, December 4, 2019

syamalas Arusuvai virunthu: vengaya poondu vatha kuzhmbu

syamalas Arusuvai virunthu: vengaya poondu vatha kuzhmbu: வெங்காயம் &  பூண்டு  வத்த குழம்பு வெங்காயம் கிடைக்காத இந்த நேரத்தில் வத்த குழம்பா ? என்ன தில் இருந்தா எழுதலாம் ?என கேட்பது காதில் வ...

vengaya poondu vatha kuzhmbu

Image result for onionவெங்காயம் &  பூண்டு  வத்த குழம்பு


வெங்காயம் கிடைக்காத இந்த நேரத்தில் வத்த குழம்பா ? என்ன தில் இருந்தா
எழுதலாம் ?என கேட்பது காதில் விழுகிறது ..ஆனால் நான்தான் இந்தியாவில்
இல்லையே .நான் uk அல்லவோ இருக்கிறேன் .இங்கு ஐந்து கிலோ பையில்
வெங்காயம் வாங்குகிறோம் .அது சரி இப்போ குழம்பு செய்வதை பார்ப்போம் .
செய்முறை
நான்கு வெங்காயம் இருபது பூண்டு அதாவது இருபது பூண்டு பல் எடுத்து கொள்ளவேண்டும் .வெங்காயம் நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .பூண்டையும் நறுக்கி கொள்ளவேண்டும் .வாணலியில்
கூடிய வரை நல்லஎண்ணெய் அல்லதுசன் பிளார் எண்ணெய் நான்கு டேபிள்
ஸ்பூன் ஊற்றி அதில் கால் ஸ்பூன் கடுகு .ஒரு ஸ்பூன் வெந்தயம் .நான்கு
காய்ந்த மிளகாய்,ஒருடேபிள்  ஸ்பூன் துவரம் பருப்பு போட்டு கடுகு
வெடித்ததும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு இரண்டையும் போட்டு வதக்கவும் .
,கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்க்கவும் ஒரு பெரிய எலுமிச்சை அளவு
புளியைநான்கு கப் தண்ணீரில்  .நன்றாக கரைத்துவதக்கிய வெங்காய,பூண்டு கலவை யில் ஊற்றவேண்டும் .இரண்டு ஸ்பூன்சாம்பார் மிளகாய் பொடி  
போடவேண்டும் 

தேவையான உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும் .மிளகாய் பொடி
பச்சை வாசனை போனதும் தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன் போட்டு
தண்ணீர் விட்டு நன்றாக கசக்கி பால் எடுத்து   குழம்பில் ஊற்றவேண்டும் .
நன்றாக கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றி கொதிக்க
விடவேண்டும் .எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பில் இருந்து
இறக்கி வைக்கவேண்டும் ..
இப்போ வத்த குழம்பின் வாசனை ஊரையே தூக்கும்
.பரிமாற ரெடி 

Friday, November 29, 2019

syamalas Arusuvai virunthu: potato roast

syamalas Arusuvai virunthu: potato roast:  உருளை கிழங்கு ரோஸ்ட் இதன் பெயரை  கேட்டாலே நாக்கில் ஜலம் ஊறும் .ஆனால் இதை செய்வது கடினம் என நினைத்து ஹோட்டல் சென்று சாப்பிட்டு ஆசையை ந...

potato roast

Image result for potato" உருளை கிழங்கு ரோஸ்ட்


இதன் பெயரை  கேட்டாலே நாக்கில் ஜலம் ஊறும் .ஆனால் இதை
செய்வது கடினம் என நினைத்து ஹோட்டல் சென்று சாப்பிட்டு
ஆசையை நிறைவேற்றி கொள்பவர்களே  சுலபமாக சூப்பர்
ரோஸ்ட் செய்யும் முறையை கற்று கொள்ளுங்கள் .

செய்முறை

ஆறு உருளை கிழங்கை நன்றாக அலம்பி ஒவொன்றையும் இரண்டாக
நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி
கொதிக்க வைக்கவும்.அது வெந்ததா என்பதை கூர்மையான முனையுள்ள
கத்தியை கொண்டு அதில் சொருகி பார்த்து எடுக்கவும் .தண்ணீரை வடிக்கவும்
ஆறியதும் அதன் தோலை உரித்து ஒரே அளவாக நறுக்கவும் .அதைஈரமில்லாத பாத்திரத்தில் போட்டு இரண்டு ஸ்பூன் சாம்பார்
தூள் ,இரண்டு ஸ்பூன் கடலை மாவு .தேவையான உப்பு ,இரண்டு டேபிள்
ஸ்பூன் கடலை எண்ணெய் அனைத்தையும் போட்டு கலக்கவும் .அப்பொழுது
உடையாமல் கலக்கவும் .அந்த கலவையை குறைந்தது அரை மணி நேரம்
ஊற விடவும் .பிறகு ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் .
விட்டு ஒரு ஸ்பூன் கடுகு ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
.அதில் ஊறி கொண்டு இருக்கும் உருளை கிழங்கை கொட்டி மிதமான
சூட்டில் வைத்து கிளறவும் .ரோஸ்ட் பதம் வந்ததும் அடுப்பில் இருந்து
இறக்கி பரிமாறவும் .இப்பொழுது மிக coulerful roast  ready


பின் குறிப்பு
இதே போன்று சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யலாம்


Wednesday, November 27, 2019

syamalas Arusuvai virunthu: rameswaremkootu

syamalas Arusuvai virunthu: rameswaremkootu: சௌசௌ ராமேஸ்வரம் கூட்டு இந்த கூட்டு நாங்கள் ராமேஸ்வரம்  போனபொழுது அங்கு சாப்பிட்டோம் .எனவே இதற்கு நாங்கள் இட்ட பெயர் இது . செய்மூறைஎ ஒ...

rameswaremkootu

Image result for sowsow"சௌசௌ ராமேஸ்வரம் கூட்டு
இந்த கூட்டு நாங்கள் ராமேஸ்வரம்  போனபொழுது அங்கு
சாப்பிட்டோம் .எனவே இதற்கு நாங்கள் இட்ட பெயர் இது .


செய்மூறைஎ
ஒரு சௌசௌ காயை தோல் சீவி சின்ன சின்னதாக நறுக்கி
ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் நல்ல பால் ஊற்றி
கொதிக்க விட வேண்டும் .காய் வெந்தது ம் தேவையான
உப்பு போடவேண்டும் .அரைகப் தேங்காய் துருவல் ,ஒருஸ்பூன்
சீரகம் ,இரண்டு பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில்
அரைத்து வெந்த காயில் கொட்டி கொதிக்க விட்டு ஒரு ஸ்பூன்
அரிசி மாவை கரைத்து விடவேண்டும் .அதன் பின் ஒரு ஸ்பூன்
எண்ணையில் கடுகு ,உடைத்த உளுத்தம்பருப்பு தாளித்து
கொட்டவேண்டும் .இப்பொழுது கூட்டு ரெடி .இதை பார்ப்பதற்கே
மிக ரம்மியமாக இருக்கும் ..                                                                                                

Tuesday, November 26, 2019

syamalas Arusuvai virunthu: pagarkal pittalai

syamalas Arusuvai virunthu: pagarkal pittalai: பாகற்காய் பிட்டலை தற்பொழுது sugar அதாவது சர்க்கரை நோய் என்பது உலகில் உள்ள அணைத்து தரப்பினருக்கும் உள்ளது .அதற்க்கு சிறந்த நிவாரிணி பாக...

pagarkal pittalai

Image result for pakarkaiபாகற்காய் பிட்டலை


தற்பொழுது sugar அதாவது சர்க்கரை நோய் என்பது உலகில் உள்ள
அணைத்து தரப்பினருக்கும் உள்ளது .அதற்க்கு சிறந்த நிவாரிணி
பாகற்காய் .அதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நம்
உடலில் சர்க்கரை அதிகம் ஆகாமல் கட்டுப்பாட்டில் இருக்கும் .
பிட்லை செய்ய துவரம் பருப்பு கொண்டை கடலை அல்லது வேர்க்கடலை
சேர்ப்பதால் ப்ரோட்டீன் ஆகியவையும் நமக்கு தேவையான அளவு
கிடைக்கிறது .இதில் கசப்பு தெரியாமல் இருக்கநெல்லிக்காய் அளவு
வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்தும் தேங்காய் சேர்ப்பதால் பொட்டாசியம்
ஆகியவை நமக்கு கிடைக்கிறது ..இது செய்யும் முறையை கூறுகிறேன்
அனைவரும் செய்து பயனடையவும்
செய்முறை

தேவையான பொருட்கள்
1பாகற்காய் ------------------------------------------------கால்கிலோ
2புளி ----------------------------------------------------------எலுமிச்சை அளவு
3சாம்பார்பொடி --------------------------------------------இரண்டு டீஸ்பூன்
4வேகவைத்த துவரம் பருப்பு -----------------------இரண்டு கரண்டி
5வேகவைத்த கொண்டைக்கடலை
                        அல்லது
வேர்க்கடலை ============================200கிராம்
6பெருங்காயம் ==================-----------------கால்ஸ்பூன்
7வெல்லம் ================================நெல்லிக்காய் அளவு
8கடலைப்பருப்பு -----------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
9கொத்தமல்லி விதை ----------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்
10சிகப்பு மிளகாய் ------------------------------------------------நான்கு
11வெந்தயம் =================================அரைஸ்பூன்
12எண்ணெய் =================================நான்கு டேபிள் ஸ்பூன்
13உப்பு =======================================தேவையான அளவு
14கறிவேப்பிலை ===============================இரண்டு கொத்து
15கடுகு ,உடைத்த உளுத்தம் பருப்பு ================தலா ஒரு ஸ்பூன்
16தேங்காய் துருவல் =============================இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை

கொத்தமல்லி விதை கடலைப்பருப்பு மிளகாய்ஆகியவற்றை சிறிது
எண்ணெய் விட்டுபொன்னிறமாக வறுத்து அதனுடன் தேங்காய் துருவல்
சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைக்கவும்
 பாகற்காயில்  இரண்டு கப் தண்ணீரில் புளியை கரைத்து ஊற்றவும்
அதில் மிளகாய்ப்பொடி ,பெருங்காயம் ,உப்பு போட்டு நான்றாக கொதிக்க
விடவும் .காய் நான்றாக வெந்ததும் வெந்த பருப்பு ,கடலை இரண்டையும்
போட்டு கொதிக்க விடவும் பிறகு அதில் மிக்ஸியில் அரைத்த பொடி
வெல்லம் போட்டு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்க விடவும்
கெட்டியாக வரும் நேரம் கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
கொட்டவும் ..பிட்டலை யை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும் .
பிட்டலை தயார் .











க்கொட்டி

  

Saturday, November 16, 2019

syamalas Arusuvai virunthu: puli inchi

syamalas Arusuvai virunthu: puli inchi: புளி இஞ்சி  பெரிய கல்யாணங்களில் மோர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு  பதிலாக  புளி இஞ்சி என்றitem போடுவார்கள் .அது மிகவும் ருசியாக இருக்கும் .அ...

puli inchi

புளி இஞ்சி 


பெரிய கல்யாணங்களில் மோர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு  பதிலாக 
புளி இஞ்சி என்றitem போடுவார்கள் .அது மிகவும் ருசியாக இருக்கும் .அது
செய்யும் முறையை பார்ப்போம் .
செய்முறை 
தேவையான   பொருட்கள் 
இஞ்சி துருவியது -----------------------------------ஒரு கப் 
பச்சை மிளகாய் -------------------------------------மூன்று 
புளி ----------------------------------------------------------ஒரு   எலுமிச்சை  அளவு  
மிளகாய்பொடி ------------------------------------- அரை  டேபிள் ஸ்பூன் 
 மஞ்சள் தூள் -------------------------------------------ஒரு சிட்டிகை 
பெருங்காயம் --------------------------------------------ஒரு சிட்டிக
வெல்லம் --------------------------------------------------ஒரு டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் -------------------------------------------------மூன்று டேபிள் ஸ்பூன் 
கடுகு -------------------------------------------------------------அரை டீஸ்பூன் 
உப்பு -------------------------------------------------------------தேவையான அளவு 


செய்முறை :

1இஞ்சியை துருவி  வைத்து கொள்ளவேண்டும் 
2புளியை அரைகப்  தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைத்து கொள்ளவேண்டும் 
3அடுப்பில் வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகை தாளி  க்கவேண்டும் 
4அதில் மிளகாய் சிறியதாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும் 
5இஞ்சி துருவலை சேர்க்க வேண்டும் .அடுப்பு மெதுவாக எரிய விட வேண்டும்புளி தண்ணீரை சேர்க்க வேண்டும்  
6மஞ்சள் தூள் ,பெருங்காயம் சேர்க்கவேண்டும் 
7வெல்லம் சேர்க்க வேண்டும் 
8அடிபிடிக்காமல் கிளறவேண்டும் 9எண்ணெய் பிரிந்து வரும்  சமயம் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும் 
9ஈரமில்லாத பாத்திரத்தில் அல்லது பாட்டலில் போட்டு வைக்க வேண்டும் 

இது மிக ருசியாக இருக்கும் .தயிர் சாதத்திற்கு சரியான காம்பினேஷன்  

  

Monday, November 11, 2019

syamalas Arusuvai virunthu: madras hotel sambar

syamalas Arusuvai virunthu: madras hotel sambar: 1960கு முன்னால்  சென்னை க்கு  வருபவர்கள் அனேகமாக ரயிலில் தான் வருவார்கள் .ரயில் அனேகமாக காலையில் சென்னைக்கு வரும் வந்ததும் நேராக ஹோட்டலுக...

madras hotel sambar

1960கு முன்னால்  சென்னை க்கு  வருபவர்கள் அனேகமாக ரயிலில்
தான் வருவார்கள் .ரயில் அனேகமாக காலையில் சென்னைக்கு வரும்
வந்ததும் நேராக ஹோட்டலுக்கு தான் போவார்கள் .அப்படி ஒரு பழக்கம்
ஹோட்டலில் இரண்டு இட்லீ ஆர்டர் பண்ணுவார்கள் ..அது சாம்பார் என்ற
குளத்தில் மிதக்கும் ..சாம்பார் இட்லி என்பதால் இரண்டு இட்லிசாப்பிட்டால்
வயறு ரொம்பிவிடும் .எனவே மெட்ராஸ் சாம்பார் ப்ரசித்திபெற்றது .அதன் வாசனைஅப்பப்பாஇன்று நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறும் .இப்பொழுது
எல்லாம் கலப்படம் அந்த ருசியும் இல்லை .அதை அனுபவித்தவர்களை
கேட்டால் தெரியும் நான் அந்த மெட்ராஸ் ஹோட்டல் சாம்பார் பற்றி  
எ .ழு து கிரேன் நீங்களும் செய்து பார்த்து அனுபவியுங்கள் .
தேவை யான   பொருட்கள்
துவரம் பருப்பு -----------------------------------------------2டேபிள் ஸ்பூன்
பயத்தம் பருப்பு ---------------------------------------------1டேபிள் ஸ்பூன்
தக்காளி பழம் --------------------------------------------------கால் கிலோ
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் --கால் கிலோ
பச்சை மிளகாய் ---------------------------------------------------5
கறிவேப்பிலை -----------------------------------------------------ஒரூ பிடி ,கடலை  
கடுகு----------------------------------------------------------------------அரை ஸ்பூன்
பொடிசெய்ய
தனியா --------------------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ------------------------------------------------4
கடலை பருப்பு -----------------------------------------------------2டேபிள் ஸ்பூன்
வெந்தியம் -------------------------------------------------------------அரை ஸ்பூன்
சேய்முறை
1முதலில் இரண்டு பருப்பையும் குக்கரில் வேகா வைத்து கொள்ளவும்
2வெங்காயம் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்
3மிளகாயை நீளவாட்டில்  செய் கீறி வை
4ஒரு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விடு
5அதில்கடுகு ,கடலை பருப்புஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறு
6அதில் வெங்காயம் ,தக்காளி ,மிளகாய் போட்டு வதக்கு
7ஆறு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடு 
8பொடிசெய்யவேண்டிய பொருட்களை எண்ணெய் விட்டு பொன்னிறமாக
வறுத்து மிக்ஸியில் பொடிசெய்
9காய்கள் வெந்ததும் அரைத்த பொடியை அதில் போட்டு நன்றாக கலக்கு
நன்றாக கொதித்ததும் கறிவேப்பிலை போடு
10இப்பொழுது சாம்பார் தயார்

இதை இட்லீ ,வடை ,வெண் பொங்கலுக்கு போட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்
.நீங்களும் செய்து அசத்துங்கள் பார்க்கலாம்

பின் குறிப்பு ;  இந்த சாம்பாருக்கு புளி  சேர்க்கவேண்டாம்
 
 





Thursday, November 7, 2019

syamalas Arusuvai virunthu: kele paruppuusili

syamalas Arusuvai virunthu: kele paruppuusili: கேல்   பருப்புஉசிலி  t தேவையான பொருட்கள்  துவரம்பருப்பு -----------------------------------------1கப்  கடலைப்பருப்பு ----...

kele paruppuusili

கேல்   பருப்புஉசிலி 



Image result for kale"t

தேவையான பொருட்கள் 

துவரம்பருப்பு -----------------------------------------1கப் 
கடலைப்பருப்பு --------------------------------------அரை கப் 
கேல் -------------------------------------------------------300கிராம் 
உடைத்தஉளுத்தம்பருப்பு -----------------------1டேபிள் ஸ்பூன் 
கடுகு ---------------------------------------------------------1ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் ----------------------------------------5
எண்ணெய் ----------------------------------------------------2டேபிள் ஸ்பூன் 
செய்முறை 

கேல் கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீர் விட்டு அலசு 
பிறகு பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வை பிறகு 
கீரையை இட்லீ தட்டில் வேக வை பருப்புகளை வடிய வைத்து 
மிக்ஸியில் மிளகாய் தேவையான உப்பு போட்டு அரை 
அதை இட்லீ தட்டில் வேகவை . ஆறவிடு .ஆறியதும் 
மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அரை இப்பொழுது 
உதிரி உதிரியாக இருக்கும் .வாணலியில் எண்ணெய் விட்டு 
கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்து 
அதில் கேல்  போட்டு ஒரு நிமிடம் வதக்கு பின் அரைத்த 
பருப்பைபோட்டு கிளறு தேவை
யானால் இன்னும் கொஞ்சம் 
எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கு உசிலி தயார் 
இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் .இதற்க்கு 
தொட்டுக்கொள்ள மோர்குழம்பு ,வத்தக்குழம்பு சரியான காம்பினேஷன் 


இந்த receipy US இல் உள்ள  விமலா மன்னி  கூறியது .இதை நா ன் 
செய்து பார்த்தேன் .பிரமாதமாக இருந்தது .எனவே நான் பெற்ற 
இன்பம் அனைவரும் பெற இதை எழுதி உள்ளேன் .விமலா மன்னிக்கு என் நன்றி 

Wednesday, November 6, 2019

syamalas Arusuvai virunthu: califlowermoorkutu

syamalas Arusuvai virunthu: califlowermoorkutu: காலிஃளார் மோர்க்கூட்டு

syamalas Arusuvai virunthu: califlowermore kuttu

syamalas Arusuvai virunthu: califlowermore kuttu: காலிஃளார் மோர்க்கூட்டு ஒரு காலிஃளார் எடுத்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வை ..பிறகு மூன்று பச்சைம...

califlowermore kuttu

காலிஃளார் மோர்க்கூட்டு


Image result for cauliflower"
ஒரு காலிஃளார் எடுத்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேக வை ..பிறகு மூன்று பச்சைமிளகாய்
ஒரு ஸ்பூன் சீரகம் .மூன்று ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில்
அரை அதைவெந்த காலிஃளாரில் ஊற்றி நன்றாக மாசி ய  கிளறு .நன்றாக
கொதித்ததும்அடுப்பில் இருந்து இறக்கி வை சிறிது ஆறியதும் தேவையான
தயிரை கடைந்து ஊற்று .கடுகு .உடைத்த உளுத்தம் பருப்பு இரண்டையும்
தாளித்து கொட்டு .கறிவேப்பிலை.அல்லது கொத்தமல்லி போடு .இப்பொழுது
மோர்கூட்டு தயார் .இது எல்லா பதர்த்தங்களுக்கும் தொட்டு கொண்டு
சாப்பிட நன்றாக இருக்கும் 

califlowermoorkutu


காலிஃளார் மோர்க்கூட்டு 

Monday, November 4, 2019

kaliflower more kuttu

Image result for kaliflower"

syamalas Arusuvai virunthu: asokahalwa

syamalas Arusuvai virunthu: asokahalwa: தேவையான பொருட்கள் 1பயத்தம்பருப்பு =====================================1கப் 2சர்க்கரை ---------------------------------------------------...

asokahalwa

தேவையான பொருட்கள்
1பயத்தம்பருப்பு =====================================1கப்
2சர்க்கரை ------------------------------------------------------------------------ஒண்ணரை கப்
3கோதுமை மாவு ---------------------------------------------------------------1டேபிள் ஸ்பூன்
4நெய் ---------------------------------------------------------------------------------அரை கப்
5முந்திரி ----------------------------------------------------------------------------15
கேசரி பவுடர் =========================================கால்ஸ்பூன்
செய்முறை
1பயத்தம்பருப்பை வாசனைவரும் வரை வறு
2அந்த பருப்பில் தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து நான்கு விசில்
வந்ததும் நிறுத்து
3சக்கரையை மிக்ஸியில் பொடி செய்
4ஆறிய பருப்பை மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அரை
5வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு முத்திரியை  வறுத்து எடு
6அந்த நெய்யில் கோதுமைமாவை இலேசாக வறுத்து எடு
7அரைத்த பருப்பு கோதுமைமாவு சர்க்கரை அனைத்தையும் கட்டி தட்டாமல்
கிளறு
8கொஞ்சம்நெய் சேர் ,கேசரி பவுடர் சேர்
9கெட்டியாக வரும் வரை கிளறி மீதமுள்ள நெய் முந்திரியை சேர்த்து கிளறு
10ஒட்டாமல் வந்ததும் இறக்கி வை
11இப்பொழுது அசோகா ஹல்வா ரெடி

Thursday, October 31, 2019

KALE PARUPPU USILI

KELE பருப்பு உசிலி 
தேவையான பொருட்கள் 
KALE கீரை =========================200கிராம் 
துவரம் பருப்பு =====================1கப்
கடலை பருப்பு =====================அரை கப்  

boodhakannadiblogspot.com

Smallest house in great Britain
Image result for smallest house in great britain சென்ற முறை இங்கிலாந்து சென்ற
பொழுது வேல்ஸ் இல் உள்ள கான்வே என்றஊரில் உள்ள கிரேட் பிரிட்டனின்
மிகமிக சிறிய வீடு என்ற பெயர் பெற்ற வீட்டை சென்று பார்த்தோம் .அதற்கு
qway ஹவுஸ் என்று பெயர் .இது 72INCHES அகலமும் 122INCHES உயரமும் உள்ள வீடு .இதில் 1900வரை ராபர்ட் ஜோன்ஸ் என்பவர் வசித்து வந்தார் .அந்த
வீட்டில் நேராக நின்றதே இல்லையாம் .அந்த வீட்டில் குளியல் அறை மற்றும்
கழிவறை (டாய்லட் )இல்லை என்பது குறிப்பிட தக்கது .அந்த வீட்டினுள் சென்று
பார்த்தோம் .நாம் நும் வீடு எவ்வளுவு பெரியதாக இருந்தாலும் இடம் போதவில்லை என்று புலம்புகிறோமே என்று கூறிக்கொண்டே வெளியே
வந்தோம் 

Thursday, October 17, 2019

thayir vadai

தயிர்  வடை ========சுலபமான  முறை



தேவையான  பொருட்கள்

குண்டு  உளுத்தம்  பருப்பு   =====================   1  கப்
எண்ணெய் =======ஊற ==========================கால் லிட்டர்
பச்சை மிளகாய் =============================4
உப்பு ===================================தேவையான அளவு
பால் ====================================அரை லிட்டர்
கேரட் ===================================1
கொத்தமல்லி தழை  நறுக்கியது ==========1பிடி
தயிர்===================================1லிட்டர்
செய்முறை

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
பின் நன்றாக வடிய வைத்து மிக்ஸியில் போட்டு மிளகாய் உப்பு
சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் .பின்பு வாணலியில்
எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்
..எண்ணெய் காய்ந்ததும்எலுமிச்சைஅளவு மாவு எடுத்து வாழை 
இலையில் வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
வந்ததும் எடுக்கவும்
.அனைத்து வடை களையும்போட்டு எடுத்ததும் நன்றாக  ஆறவைக்கவும்
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து அதில் ஒவ்வொரு வடையாக போட்டு எடுத்து தயிரில் நனைத்து ஒரு அகலமான தாம்பாளத்தில்
வட்டமாக ஒன்றின்மேல் ஒன்று இடிக்காமல் வைக்கவும் ..பின்பு மீதமுள்ள தயிரை வடைகளின் மேல் ஊற்றி விடவும் .காரட்டை துருவி ஒவ்வொரு
வடையின் மேலும் தூவி கொத்தமல்ல தழையை நடுவில் வைத்து
அலங்கரிக்கவும் .நன்றாக ஊறியதும் தோசை திருப்பியால் எடுத்து தட்டில்
வைத்து பரிமாறவும்

நீங்கள் செய்த வடை எந்த ஹோட்டலில் வாங்கியது என விருந்தினர்
கேட்பார்கள்

Friday, October 11, 2019

syamalas Arusuvai virunthu: green apple thokku

syamalas Arusuvai virunthu: green apple thokku: அமெரிக்கா இங்கிலாந்து போன்ற மேலை      மிக நாடுகளில்ஆப்பிள் மரங்கள் இல்லாத வீடுகள் பார்ப்பதே அபூர்வம் .அதில்  green apple புளிப்பாக இருப்பத...

green apple thokku

Image result for greenappleஅமெரிக்கா இங்கிலாந்து போன்ற மேலை      மிக நாடுகளில்ஆப்பிள் மரங்கள் இல்லாத வீடுகள் பார்ப்பதே அபூர்வம் .அதில் 
green apple புளிப்பாக இருப்பதால் அதிகம் உபயோகிப்பது கிடையாது .நான் இங்கிலாந்து செல்லும் சமயங்களில் அதை தொக்கு செய்ய உபயோகிப்பேன் .அது மிக நன்றாக இருக்கும் அதை நீங்களும் செய்துபாருங்கள் 
தேவையான பொருட்கள் 
க்ரீன் ஆப்பிள் =====================================2
மிளகாய் பொடி ===================================2ஸ்பூன் 
பெருங்காயத்தூள் ================================கால் ஸ்பூன் 
எண்ணெய் =======================================4டேபிள் ஸ்பூன் 
உப்பு =============================================தேவையான அளவு 
வெல்லம் =========================================கோலிக்குண்டு அளவு 
கடுகு ==============================================1ஸ்பூன் 
செய்முறை 
முதலில் ஆப்பிளை துருவி கொள்ளவேண்டும் 
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில் 
துருவிய ஆப்பிளை போட்டு வதக்க வேண்டும் .பின்பு மிளகாய் பொடி 
பெருங்காயம் உப்பு போட்டு கிளறி நன்றாக சுருண்டு வரும் சமயம்  மீதமுள்ள எண்ணெய் விட்டு வெல்லம் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும் 




முதலில் ஆப்பிளை துருவி கொள்ள வேண்டும் 
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு  

green apple thokku

Image result for greenapple